Thursday, February 20, 2014

சளி பிடித்தால்...............?

www.puthiyatamil.org

-
நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு ஆகிய இரண்டும்
சளியைத் தடுக்க உதவுகின்றன. 

ஆரஞ்சு, தக்காளி, மற்றும் வைட்டமின் 'சி' 
அடங்கியுள்ள மற்ற பழங்களையும் சாப்பிடுவது 
நல்லது
-
2) பரவலாக நம்பப்படுவதைப்போல், சளி குளிரில்
அல்லது தண்ணீரில் நனைவதால் ஏற்படுவதில்லை.
ஆனால் தண்ணீரில் நனைந்தால் சளி மோசமடையக்
கூடும்

-
3) சளியுள்ளவர் தும்மும்போது வைரஸ் கிருமிகள்
காற்றில் கலந்து மற்றவர்களையும் தொற்றுகிறது
-

4) தனக்கு ஏற்பட்ட சளி மற்றவர்களுக்கும் பரவாமல் 
இருக்க சளி கொண்டவர் தனியாகச் சாப்பிட்டு, தனியாகத்
தூங்க வேண்டும்

குழந்தைகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
-
5) தும்பும்போதும் இருமும்போதும் தம்முடைய 
மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ள வேண்டும்

6) மூக்கை அழுத்திச் சிந்துவது காதுவலியை ஏற்படுத்தலாம்.
எனவே மூக்கைச் சிந்தாதீர்கள். வெறுமனே துடைத்து
விடுங்கள்.
குழந்தைகளுக்கும் இவ்வாறு செய்யக் கற்றுக் கொடுங்கள்
-
7) அழுத்திச் சிந்துவதால் காதுவலியும் பீனிசம் போன்ற 
நோய்களும் ஏற்படலாம்
-
8) ஆவி பிடிப்பது மூக்கடைப்பு குணமாக உதவலாம்
-
9) மூக்கடைப்புக்கான சொட்டு மருந்துகளை மூன்று
நாட்களுக்கு மேல், ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு
மேல் பயன்படுத்தாதீர்கள்
-
10) தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு நாசித்
துவாரத்தில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விடவும்.
ஓரிரு நிமிடங்கள் அப்படியே தலையைச் சாய்த்து 
வைதிருக்கவும். பின்னர் தலையை மறுபக்கமாகச் சாய்த்து 
நாசியின் அடுத்த துவாரத்திலும் சொட்டு மருந்தை
விடவும்

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...