Saturday, March 8, 2014

தாமதமாகக் குழந்தை பெறுவது குழந்தைகளின் தந்தைமார்களுக்கு உயிர்வாழும் காலம் +......+

தாமதமாகக் குழந்தை பெறுவது குழந்தைகளின் தந்தைமார்களுக்கு உயிர்வாழும் காலத்தை ஏற்படுத்துமென்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
ஆண் ஒருவர் வயதாகும்போது விந்தின் தன்மை மாறுகின்றதென்றும் நீண்டகாலம் உயிர்வாழும் தன்மையைக் கொண்ட மரபணுவை அவர் பெறுகின்றாரென்றும் அதுவே அவரது பிள்ளைகளுக்கும் ஏற்படுகின்றதென்றும் கூறுகின்றனர்.
இதனை 1,779 பேரில் ஆராய்ந்து பார்த்ததன்மூலம் கண்டுபிடித்துள்ளனர். இது தேசிய விஞ்ஞானக் கல்லூரியின் முன்னேற்றமாகவும் உள்ளது.
எமது மரபணுவில் அமைந்துள்ள குறோமொசோம்களின் முடிவில் உள்ள telemeres எனப்படும் அமைப்பானது ஒருவரின் உயிர்வாழ் தன்மையுடன் தொடர்புபட்டுள்ளதென நிபுணர்கள் சிறிது காலமாக அறிந்துவைத்திருந்தார். இந்த telemere நீளம் குறைவாக இருப்பின் அது ஆயுட்காலத்தினையும் குறைவாக்குமென்கின்றனர்.
சப்பாத்து நூலின் நுனியிலுள்ள பாதுகாப்பு வளையம்போல குறோமோசோம்களின் முடிவிலுள்ள telemeres அவற்றைச் சேதமாகாமல் பாதுகாக்கின்றன.
இதுபோன்ற நீண்டகாலம் வாழும் தன்மையினைக் கொண்டவர்கள் பிலிப்பைன்சில் வாழ்வதாக அமெரிக்காவின் வடமேற்குப் பல்கலைக்கழத்திலுள்ள மானிடவியல் திணைக்களத்தினர் கூறுகின்றனர்.
தாமதமாகக் குழந்தைகள் பெறுவது கருக்கலைவுகளை ஏற்படுத்துமெனினும், அவர்களில் நீண்டகாலம் சுகாதார நலன்கள் இருக்குமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் ஒரு வயதுகூடிய தந்தையிடமிருந்து கிடைக்கும் நீண்ட telemeres இனால் பொதுமான மரபணுச் சேதமும் விந்தில் பாதிப்பும் ஏற்படும் பிரதிகூலமும் ஏற்படக்கூடிய நிலையும் இருக்கலாமென்றும் ஒரு குண்டைத் தூக்கிப்போடுகின்றார்கள் இந்த ஆய்வாளர்கள்.

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...