Saturday, March 15, 2014
எடை குறைய 7 நாட்கள்-7 days to drop weight
உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். பாரமில்லாத உடல் வந்தது போல் இருக்கும் என்று ஏகப்பட்ட நன்மைகளை கூறுகிறார்கள். இதை அனுபவித்தவர்கள்.
எல்லா வகையான பழங்களையும் சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தை மட்டும் தவிர்க்க வேண்டும். மூலாம் பலம் தர்ப்பூசனி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டுமானாலும் சாப்பிடலாம்.புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் வழங்கும்.
காய் கறிகளை சமைத்தோ பச்சையாகவோ வயிறு நிறைய சாப்பிடுங்கள், வெறும் காய்கறிகளில் காபோஹைட்றேட் கிடையாது. அதனால் இரன்டாவது நாள் உணவில் வேக வைத்த உருழைக்கிழங்கு மசியலை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் நார் சத்துகளையும் கொடுக்கும்.
சாப்பாட்டில் கைகுத்தல் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். 10 தம்ள்ர் நீர் மட்டும் 7 நாட்களும் மறக்காமல் குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம், ஜீரண முறை எல்லாமே சிறப்பான கட்டுப்பாட்டில் இருக்கும் எடை குறைந்த உற்சாகம் முகத்தில் தெரியும் உடல் காற்றுப் போல் லேசாகத் தெரியும்
வயிற்றில் வளர்வது .....ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள்
அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள்.
இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.
நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.
கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.
கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
Friday, March 14, 2014
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும்.... 20 உணவுகள்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.
இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.
ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.
அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.
பார்லி :
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
கத்திரிக்காய் :
கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
மீன் :
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
ஆப்பிள் :
ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.
நட்ஸ் :
நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
டீ :
அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
வெங்காயம் :
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஓட்ஸ் :
ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
முழு தானியங்கள் :
முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பசலைக் கீரை :
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
சோயா பொருட்கள் :
சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
பூண்டு :
பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.
வெண்டைக்காய் :
கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
ரெட் ஒயின் (Red Wine) :
ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
Max: 50 min-100 max ml/Day it Works as medicine
சாக்லெட் :
சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.
பீன்ஸ் :
அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். (Note this)
மிளகாய் :
மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.
மார்கரைன் :
இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.
அவகேடோ :
இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.
ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
எலும்பு அரிப்பு - Bone Erosion
மண் அரிப்பு கேள்விப்பட்டு இருப்பீர்கள், எலும்பு அரிப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நமது உடலுக்குள் நிகழும் விபரீதமான இயற்கை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைந்தால் உடலில் எலும்பு அரிப்பு ஏற்படும்.
இதனால் சாதாரண வேலைகளின்போதுகூட எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. 30 வயதுக்கு முன்புவரை எலும்பு செல்களும் வழக்கம்போல வளர்வதும், முதிர்ந்தவை அழிவதும், மீண்டும் புதுப்பிக்கப்படுவதுமாக இருக்கும்.
35 வயது கடந்தால் இந்த புதுப்பித்தல் நிகழ்வு அரிதாகிவிடும். எலும்பின் உறுதிக்கு கால்சியம் அவசியம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதயத்துடிப்பு சீராக இருப்பதற்கும் கால்சியம் அத்தியாவசியம். ரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைந்தால் அவை எலும்புகளில் படிந்திருக்கும் கால்சியத்தை உறிஞ்சத் தொடங்குகிறது.
இதனால் எலும்புகள் செல்லரித்து உறுதி இழக்கிறது. இதுபோன்ற நிலையில் நாம் படுக்கையில் இருந்து எழுவது போன்ற சாதாரண செயல்களைச் செய்யும்போது கூட எலும்புகள் படக்கென்று உடைந்து போகும். மருத்துவ உலகம் இந்த பாதிப்பை 'ஆஸ்டியோ பெரோசிஸ்' என்கிறார்கள்.
தண்டுவடம் இந்த எலும்பு அரிப்பால் பாதிக்கப்பட்டால் கூன் விழுந்துவிடும். இளமை முடியும் தருணத்தில் இதுபோன்ற பாதிப்புகள் வெளிப்படலாம்.
எனவே இளம்பருவம் முதலே உடலில் கால்சியம் அளவாக சேர்த்து வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும். 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தினமும் 800 மில்லிகிராம் கால்சியம் தேவை.
10 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் அவசியம். சீராக கால்சியம் உணவில் சேர்த்தால் எலும்பு அரிப்புக்கு அவசியம் இல்லாமல் செய்துவிடலாம்.
10 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் அவசியம். சீராக கால்சியம் உணவில் சேர்த்தால் எலும்பு அரிப்புக்கு அவசியம் இல்லாமல் செய்துவிடலாம்.
சோயாபீன்ஸ், தேங்காய்த் துருவல், தயிர், எருமைப் பால், பாலாடைக்கட்டி, சீரகம் ஆகியவற்றில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. என்றும் உடல் உறுதிக்கு எலும்பின் உறுதி அவசியம் என்பதை உணர்வோம்
Wednesday, March 12, 2014
Water therapy-வாட்டர் தெரபி
வாட்டர் தெரபி :
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.
இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது.
தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.
வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால்,
அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,
2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,
7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,
4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,
3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,
10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,
மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,
2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,
7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,
4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,
3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,
10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,
மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது....
நரம்பு தளர்ச்சியை போக்கும்.... மாம்பழம்
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.
மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும்.
மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உமாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.
மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும்.
குமட்டல் நீங்கும்லர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.
மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும்.
மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்
Monday, March 10, 2014
உங்கள் இறப்பை தெரிந்து கொள்ள.. புதிய கருவி வந்தாச்சு
HIV VACCINE SOON....2019
உங்கள் இறப்பை தெரிந்து கொள்ள புதிய கருவி வந்தாச்சு
அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் அதிநவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் அதிநவீன ரத்த பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும்.
அந்த வகையில் பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.
இதேபோல் பிற நோயால் தாக்கப்பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம்.
நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.
இதை கண்டறியும் நவீன சோதனை, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியுமென தெரிவித்துள்ளார்
THANKS TO :http://www.thulikal.com
அக்குள் கருமையை மறைய செய்யும்.... சர்க்கரை
அக்குள் கருமையை மறைய செய்யும்........... சர்க்கரை
தற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கு குறிப்பாக அக்குளில் வளரும் தேவையற்ற முடிகளை தவறாமல் நீக்க வேண்டும். அதிலும் வேக்சிங், ஹேர் ரிமூவல் க்ரீம் அல்லது ஷேவிங் மூலம் நீக்கலாம். ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு அக்குளை பராமரிப்பதன் மூலம் போக்க முடியும்.
இங்கு அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தினமும் இரவில் படுக்கும் போது அக்குளில் தடவி, காலையில் எழுந்து கழுவி வந்தால், விரைவில் அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம்.
• எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அதனை தினமும் அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். வேண்டுமானால் எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரை சேர்த்தும் பயன்படுத்தலாம்.
அதிலும் இந்த முறையை தினமும் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.
• சர்க்கரையைக் கொண்டு அக்குளைப் பராமரித்து வந்தால், சர்க்கரையானது அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும்.
• பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு அக்குளை ஸ்கரப் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்குவதுடன், அக்குளில் இருந்து வெளிவரும் துர்நாற்றமும் நீங்கும். வேண்டுமானால், பேக்கிங் சோடாவுடன், ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.
• தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் மூன்று முறை மசாஜ் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்கிவிடும். அதிலும் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து செய்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
• அக்குளில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமானால், கடலை மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
உருளைக்கிழங்கின் துண்டுகளைக் கொண்டு அக்குளை சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் இரண்டு தடவை செய்து வருவது நல்லது
Sunday, March 9, 2014
குழந்தைகளின் தூக்கம்...அதன்மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி...+..++...+++
* குழந்தைகளின் தூக்கம் வித்தியாசமானது. குழந்தைகளின் தூக்கத்தை கட்டுப்படுத்துவது மூளையின் ஹைப்போதலாமஸ் என்ற பகுதி. இது தூக்கத்தை மட்டுமின்றி உணவு, சுபாவம், இதயம், சருமம், கிட்னி, ஹார்மோன் செயல்பாடு போன்றவைகளையும் ஆளுமை செய்கிறது. அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் மேற்கண்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கும்.
* பெரியவர்கள் ஒரு இரவு தூங்காவிட்டால், மறுநாள் காலையில் தூங்கி அதை ஈடுசெய்துகொள்வார்கள். குழந்தைகளால் அது முடியாது என்பதால், தூக்கமின்மை குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்.
* இரண்டு மாதம் வரை குழந்தைகள் 10 முதல் 19 மணிநேரம் தூங்கும். மூன்றில் இருந்து 12 மாதம் வரை 13 மணி நேரம் வரை தூங்கும். ஒரு வயது முதல் மூன்று வயது வரையும் கிட்டத்தட்ட அதே காலஅளவில் தூங்கும். நான்கு முதல் 12 வயது வரை, பத்து மணி நேரம் தூங்குவார்கள்.
* குழந்தைகள் தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்டால், ஆகாரத்தில் குளறுபடி, சுபாவத்தில் மாற்றங்கள், ஹார்மோன் செயல்பாட்டில் சிக்கல்கள் தோன்றும்.
* கைக்குழந்தைகள் சரியாக தூங்காததற்கு சில காரணங்கள் இருக்கின்றன. பசி மற்றும் குறைந்த அளவு ஆகாரம் உட்கொண்டிருப்பது. உணவு உட்கொண்ட பிறகு சரியாக தட்டி, வாயுவை வெளியேற்றாமல் இருப்பது. பால் வயிற்றில் இருந்து நெஞ்சுப் பகுதியில் ஏறி வருதல். புட்டிப்பால் ஏற்படுத்தும் அவஸ்தை. வயிற்று வலி. மலத்துவார பகுதி வீக்கம். பூச்சி தொந்தரவு.
* ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு சிறுநீர்தொற்று, அதிக நேரம் கம்ப்யூட்டர், டெலிவிஷன் பார்ப்பது, பயம் போன்றவைகளால் தூக்கம் வராது.
* ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இரவில் எத்தனை மணிக்கு தூங்கச் செல்கிறதோ, மறு நாள் காலை அதே நேரத்திற்குவிழிக்கும். அதாவது இரவு எட்டு மணிக்கு தூங்கினால், காலை எட்டு மணிக்கு விழிக்கும். சில குழந்தைகள் வெளிச்சத்தின் விளைவாக சீக்கிரத்திலே விழித்து விடுவதும் உண்டு.
* 2 முதல் 4 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மதிய உணவுக்கு பிறகு தூங்கும். அந்த வாய்ப்பை அம்மாக்கள் பயன்படுத்தி குளிக்கவோ, ஓய்வெடுக்கவோ செய்துகொள்ளவேண்டும்.
* ஓரளவு குழந்தைகளுக்கு பக்குவம் வந்த பின்பு, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செய்யவேண்டும். இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உடலைக் கழுவி, தூக்கத்திற்கு குழந்தைகளை தயார்ப்படுத்திவிட வேண்டும்.
* குழந்தைகளை தூங்க வைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவைகளை மனோரீதியாக தூக்கத்திற்கு தயார்ப்படுத்தவேண்டும். ‘இன்னும் சிறிது நேரத்தில் நீ குளிக்கவேண்டும். பின்பு தூங்கவேண்டும்’ என்று கூறி தூங்க வைத்திடுங்கள். உடலை கழுவ மிதமாக சுடும் நீரை பயன்படுத்துங்கள்.
* பசியோடு தூங்கவைக்க முயற்சிக்காதீர்கள்.
* தூங்க செல்வதற்கு முன்பு காபி போன்ற பானங்களை பருக கொடுக்காதீர்கள்.
* குழந்தைகளின் படுக்கை அறையில் மிதமான வெளிச்சம் இருக்கட்டும்.
* படுக்கை அறையில் புகை பிடிக்கக்கூடாது.
* குழந்தைகள் சரியாக தூங்காவிட்டால் கோபம் வரும். முரண்டுபிடிப்பார்கள். திடுக்கிட்டு விழிப்பார்கள். தூக்கத்தில் நடப்பார்கள்.
* உறக்கம் மிக முக்கியமானது. அதன்மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
குளிர்காலத்தில் கடைபிடிக்கும்.... சில ஆரோக்கிய பழக்கங்கள்

குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந் நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.
இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது.
கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
எனவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் மற்றும் குளிர் காலத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் நீங்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் உடல் நலனைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக...
சத்தான உணவு :
குளிர்காலங்களில் சளி மற்றும் இருமலைத் தூண்டும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம். ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையுடைய உணவுகள் எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குறைவாக சாப்பிடவும் :
குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்கும், எனவே அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். அதன் மூலம் செறிமாணம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
தொடர்ச்சியான உடற்பயிற்சி :
காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கவும். குளிர்காலத்தில் சூரிய உதயம் தாமதமாகவே நிகழும், எனவே குளிர் நம்மை படுக்கையின் கதகதப்பிலிருந்து எழுந்திருக்க விடாது. எனவே, சோம்பலுடன் தாமதமாக எழுந்து நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக, தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றவும்.
சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி :
சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம், இதன் மூலம் சோம்பல் ஏற்படும். சாப்பிட்ட பின்னர், குறிப்பாக இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும்.
மாய்ஸ்சுரைசர் :
குளிர்காலத்தில் சருமம் பகுதி வறண்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு பால் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். நாளுக்கு ஒருமுறையாவது இவற்றை நீங்கள் உடலில் தடவ வேண்டும்.
குளிர்கால உடை :
குளிர்காலத்தில் மொத்தமான உடைகளை பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது காதுகள் மற்றும் பாதங்களை குளிர்காற்று படாமல் மூடியபடி செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜலதோஷம் மற்றும் குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
நோய்கள் :
குளிரினால் நோய்கள் வந்தால் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். சுகாதாரமான உணவு, அதிகமான ஓய்வு மற்றும் குளிர்கால புண்கள் உள்ள மற்றவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றால் நோய்கள் வருவதை தவிர்க்க முடியும்.
தியானம் :
மனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்யுங்கள். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
சூடான பானங்கள் :
சூப் மற்றும் பிற சூடான பானங்களை உட்கொள்ளவும். அவை குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். குளிர்காலம் முழுவதுமே இந்த பானங்களை பருகினால் குளிர் போயோ போச்சு!
காரம் கொஞ்சம் தேவை :
உடலை கதகதப்பாக வைத்திருக்க நிறைய மிளகாய் மற்றும் பிற காரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, உடலை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் :
குளிர்காலங்களில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் கதகதப்பாக இருக்கும். பரங்கிக்காய், உருளைக்கிழங்கு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.
வைட்டமின் `டி' :
குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் `டி' பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் `டி' உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு, வைட்டமின் டி பற்றாக்குறையை தவிர்க்கவும்.
தண்ணீர் : சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதிய தண்ணீர் அளவை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிதர்சன உண்மை தானே!
சன் ஸ்க்ரீன் :
குளிர்காலத்தில் சூரியனின் கதிர்கள் குறைந்த அளவே இருப்பதால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சருமம் பழுப்படைவதையும் மற்றும் எரிச்சலை தவிர்க்கவும் சன் ஸ்கீரீன்களை பயன்படுத் தவும்.
ஆற்றலுக்கு முன்னுரிமை :
உங்களுடைய மனநிலை மற்றும் ஆற்றலை எப்பொழுதும் உயர்வாக வைத்திருங்கள். குளிர்காலம் சுற்றுச்சூழலை டல்லாக வைத்திருந்து, உங்களுடைய ஆற்றலை மட்டுப்படுத்தி வீணாக்கி விடும். இவையெல்லாம், குளிர் காலத்தில் உடல் நிலையை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான குறிப்புகள். இவைகளைப் பின்பற்றி பயன் பெறுங்கள்.
சீதாப்பழம்
கூழான சதைப் பகுதியும், நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவையும் கொண்டது சீதாப்பழம். வெப்ப மண்டல பகுதிகளின் ருசியான கனிகளில் இதுவும் ஒன்று. சீதாப்பழத்தில் அடங்கியுள்ள அத்தியாவசிய சத்துக்களை பார்க்கலாம்..
* தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் பள்ளத்தாக்குப் பகுதிகளான பெரு, ஈக்வடாரை தாயகமாகக் கொண்டவை சீதாப்பழம். பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறங்களில் இவ்வகை கனிகள் இருக்கும்.
இதன் தோற்பரப்பு கடினமான வரிகளைக் கொண்டதுபோல் காணப்படும் என்றாலும் லேசான அழுத்தம் கொடுத்தாலே கனியின் சதைப் பகுதியை சுவைத்து உண்ணும் அளவுக்கு நெகிழ்ந்து விடும்.
சீதாப்பழத்தின் தாவர குடும்பம் அன்னோ நேசியே. இதன் அறிவியல் பெயர் அன்னோனா செரிமோலா. 4 வகையான சீதாப்பழங்கள் உள்ளன. இந்தியா உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளில் விளைவது அனோனா ரெடிகுலாடா வகை சீதாப் பழங்கள் ஆகும்.
* மாம்பழத்திற்கு நிகரான ஆற்றல் வழங்கக் கூடியது சீதாப்பழம். 100 கிராம் சீதாப்பழ சதைப் பற்றில் 75 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* சீதாப்பழத்தில் கெட்ட கொழுப்புகள் எதுவும் கிடையாது.
* எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நார்ச்சத்து சீதாப்பழத்தில் மிகுந்துள்ளது. 100 கிராம் பழத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை குடற் பகுதியில் கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
* சீதாப்பழத்தை தோல்பகுதியைத் நோயை உருவாக்கும் நச்சுப் பொருட்கள் குடலில் படியாமல் பாதுகாப்பதிலும் செயலாற்றுகிறது.
* பல்வேறு துணை ரசாயன மூலக்கூறுகள் சீதாப்பழத்தில் அடங்கி உள்ளன. ஆசிடோஜெனின் குழும துணை ரசாயனப் பொருட்கள் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது.
புற்றுநோய் மற்றும் மலேரியா தடுப்பு ரசாயனப் பொருளான சைடோடாக்சின் மூலக்கூறுகளும் கணிசமாக உள்ளன.
* இயற்கையில் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, மிகச்சிறந்த அளவில் காணப்படுகிறது. இது உடலை பல்வேறு தொற்றுநோய்க் கிருமிகளிடம் இருந்தும் காக்க வல்லது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை உடலில் இருந்து அகற்றுகிறது.
* பி-குழும வைட்டமின்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளது. குறிப்பாக பைரிடாக்சின், (வைட்டமின் பி-6) 0.257 மில்லிகிராம் உள்ளது.
இது மூளை செயல்பாட்டிற்கு அத்தியாவசிய தேவையாகும். கோபம் போன்ற பல்வேறு மனஅழுத்த பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
* சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாதுஉப்புக்களும் இதில் உள்ளன.
Saturday, March 8, 2014
ரத்தத்தை............. சுத்தமாக்கும் உணவுகள்!
மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது.
ரத்தம் தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.
ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது.
எலுமிச்சை:
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
மிளகு :
உணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது.
எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
காய்கறிகள் :
பச்சை நிறமுடைய காய்கறிகள், கீரைகள் உடல் சக்தியை அதிகரிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள குளோரோபில் மனிதர்களுக்குத் தேவையான சக்தியை ரத்தத்திற்கு அளிக்கிறது. டாக்ஸினை ரத்தம் கிரகித்துக் கொள்ள உதவிபுரிகிறது.
காரட் :
காரட்டில் உள்ள கரோட்டின் சத்து கண்ணிற்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியது. நமது உணவில் காரட் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. சமைத்து உட்கொள்வதை விட காரட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
வெள்ளைப்பூண்டு :
உடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த உணவாகும். இதில் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. ரத்தத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இது இறந்து போன செல்களை நீக்குவதோடு புதிய செல்களை ரத்தத்தில் விரைந்து உற்பத்தி செய்கிறது.
வலிப்பு நோய்: தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்(Epilepsy)
மனிதர்களிடம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. முன்பு இதற்கு திட்ட வட்டமான மருந்தோ, சிகிச்சை முறையோ இருக்கவில்லை. அதனால் வலிப்பு நோய் என்றாலே மக்கள் பயந்தனர். இன்றைய நிலை அதுவல்ல. இதர நோய்களைப் போல் வலிப்பு நோய்க்கும் மருந்தும், சிகிச்சைகளும் இருக்கின்றன. அதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே தொகுத்து தரப்படுகின்றன.
“வலிப்பு நோய் மூளையில் உண்டாகும் ஒருவகை எரிச்சலால் ஏற்படுகிறது. பிறவியிலேயே மூளையில் ஏற்படும் ஒரு கோளாறு, மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி, தலையில் அடிபட்டதால் பின்பு மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு போன்ற பல காரணங்களால் வலிப்பு ஏற்படுகிறது. பேய், பிசாசு போன்ற எந்த தாக்கங்களாலும் வலிப்பு நோய் ஏற்படுவதில்லை.
வலிப்பு நோயில் பெருவலிப்பு, சிறுவலிப்பு, சைக்கோ மோட்டார் வலிப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. பெருவலிப்பின்போது பாதிக்கப்பட்டவர் நினைவிழந்து கீழே விழுந்துவிடுவார். கை, கால்கள் சுண்டி இழுத்து துடிக்கும். சற்று நேரம் வரை அவர் நினைவிழப்பால் பாதிக்கப்படலாம். சிறுவலிப்பு என்றால், கண நேரமே நினைவிழப்பு ஏற்படும்.
தசைகளில் துடிப்பு ஏற்படலாம். சைக்கோ மோட்டார் வலிப்பு ஏற்படும் போது சிறிது நேரம் அவர் செயல்பாடு வழக்கத்திற்கு மாறானதாய் இருக்கும். நோக்கம் எதுவுமின்றி சுற்றிக் கொண்டிருப்பார். சப்புக் கொட்டுவார். வெறும் வாயில் ஏதோ விழுங்குவது போல் நடந்து கொள்வார். துணிமணிகளை தேடித் தருமாறு சொல்வார். ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசுவார்.
இவை சுயநினைவற்ற நிலையில் நடக்கும். சுயநினைவு வந்த பிறகு, முன்பு நடந்த எதுவும் அவரது நினைவுக்கு வராது. வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்? வலிப்பு நோயை முதலில் பார்க்கும்போது, பயமும் பீதியும் உண்டாகும்.
எவராவது வலிப்பு நோயால் துடிக்கும்போது, ஓர் இரும்புத் துண்டைக் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்று நம்புகிறோம். அது உண்மை அல்ல. வலிப்பு தானாகவே நிற்கிறது. வலிப்பால் துடிப்பவரை, மெதுவாய் ஒருக்களித்து எச்சில் சரளமாய் ஒழுக வசதியாய்ப் படுக்க வைக்க வேண்டும். இதனால் நோயாளியின் தொண்டை அடைக்காது.
பிறகு கைக்குட்டையையோ, துண்டு துணியையோ பந்து போல சுற்றி பற்களுக்கிடையே வைக்க வேண்டும். நாக்கையோ, உதடுகளையோ கடித்துக் கொள்ளாமலிருக்க இது உதவும். வலிப்பு வந்தவரை எழுப்ப முகத்தில் தண்ணீர் அடிக்கக்கூடாது. சுயநினைவு இழந்த நிலையிலிருக்கும் போது அவருக்கு குடிக்க எதுவும் கொடுக்கக்கூடாது.
நடுக்கம் நின்ற பிறகு அவர் தானாகவே எழுந்திருக்க விட்டுவிட வேண்டும். அதன் பின்னர் அவரை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறவேண்டும். வலிப்பு நோயாளிக்கும், மற்றவர்களுக்கும் வேறுபாடு உண்டா? இல்லை. வலிப்பு நோயாளிகளின் உடலும், உள்ளமும் மற்றவர்கள் போலவே சுறுசுறுப்பாய் இயங்கும்.
அவர்களால் நன்றாய் படிக்க முடியும். விளையாட முடியும். வேலை செய்ய முடியும். சமூக வாழ்க்கையில் கலந்து பழகும் தகுதியும், திறனும் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே உண்டு. வலிப்பு நோய் வந்த குழந்தைகள் பள்ளிக்கு போகலாமா? போகலாம். ஆனால் பள்ளியில் சேர்த்தவுடன் ஆசிரியரிடம் குழந்தையின் வலிப்பு நோய் பற்றி சொல்லிவிட வேண்டும்.
இது அந்தக் குழந்தையிடம் தனிக்கவனம் செலுத்துவதற்கும், மற்ற குழந்தைகள் வலிப்பு நோய் தொற்று நோய் அல்ல என்று தெளிவு பெறுவதற்கும் உதவும். இதனால் மற்றக் குழந்தைகள் வலிப்பு நோயுள்ள குழந்தையைக் கண்டு பயம் கொள்வதற்கு பதில் அன்பும், அனுதாபமும் காட்டத் தொடங்குவார்கள்.
வலிப்பு நோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா? உடல் நடுக்கம் நன்றாய் கட்டுப்படுத்தப்பட்டு, மருந்தும் ஒழுங்காய் சாப்பிட்டு வந்தால் திருமணம் செய்துகொள்ள தடையில்லை. வலிப்பு நோயாளியின் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் தோன்றுமா? பெற்றோரில் ஒருவர் வலிப்பு நோயாளியாய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் நோய் வருவது என்பது அரிதாகும்.
ஆனால் பெற்றோர் இருவருமே வலிப்பு நோயாளியாயிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அந்த நோய் வர வாய்ப்புண்டு. அதனால் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆலோசனையை டாக்டர்கள் வழங்குகிறார்கள். கார் ஓட்டலாமா ? தவறாமல் மருந்து சாப்பிட்டு தொடர்ந்து 3 மாதங்களுக்கு வலிப்பு வராதிருந்தால் கார் ஓட்டலாம்.
ஆனால் இரவு நேரங்களில் கார் ஓட்டுவதை தவிர்த்து விட வேண்டும். வலிப்பு நோயாளிகள் தொலைக்காட்சி பார்க்கலாமா? ஒரு சிலருக்கு தொலைக்காட்சி பார்க்கும் போது வலிப்பு வரும். அப்படிப்பட்டவர்கள் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்துவிட வேண்டும். இதர வலிப்பு நோயாளிகள் டி.வி. பார்க்கலாம். அவர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
தொலைக்காட்சி பெட்டியின் அருகாமையில் அமர்ந்தும் பார்க்கக் கூடாது. கர்ப்பமடையும் வலிப்பு நோயாளி, வலிப்பு நோய் மருந்துகளை சாப்பிடலாமா? கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலிப்பு வந்தால்தான் குழந்தைக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். எனவே, மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது. கர்ப்பமானதும் டாக்டரிடம் தகுந்த ஆலோசனையை பெறவேண்டும்.
வலிப்பு நோயாளி எத்தனை வருடங்கள் தொடர்ச்சியாக மருந்து ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஐந்து வருடங்கள் வலிப்பு இல்லாமல் இருந்தால் நரம்பியல் நிபுணரின் ஆலோசனையின்படி படிப்படியாக மருந்துகளை குறைத்துக் கொள்ளலாம். திடீரென மருந்துகளை நிறுத்தக் கூடாது.
அப்படி நிறுத்தினால் வலிப்பின் தன்மை அதி கமாகி தொடர்ச்சியாக வலிப்பு வரும். பின்பு வலிப்பு நோயை கட்டுப்படுத்துவது சிரமம். வலிப்பு நோயாளிகள் என்னவெல்லாம் சாப்பிடலாம்? எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் அது சமச்சீர் சத்துக்களை கொண்டதாக இருக்கவேண்டும்.
முக்கியமாக சரியான சமயத்தில் சாப்பிட வேண்டும். காலை சிற்றுண்டி 8 மணிக்கு, மதிய உணவு 1 மணிக்கு, மாலை டிபன் 5 மணிக்கு, இரவு சாப்பாடு 8 மணிக்கு என்று வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு வேளை சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, குறைவாக சாப்பிட்டாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.
அதனால் வலிப்பு வரலாம். அறுவை சிகிச்சை செய்து வலிப்பு நோயை குணமாக்க முடியுமா ? மூளையில் பெரிய அளவில் காசநோய் கட்டி அல்லது பூச்சி கட்டி ஆகியவற்றினால் வலிப்பு நோய் இருந்தால் அறுவை சிகிச்சை செய்து அக்கட்டியை அகற்றுவதினால் வலிப்பு நோயை கட்டுப்படுத்த முடியும்.
மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு வலிப்பு நோய் ஏற்பட்டால், புற்று நோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து வலிப்பு நோயை கட்டுப்படுத்தலாம். வலிப்பு நோய் உள்ளவர்களில் பெரும் பாலானவர்களுக்கு நோயின் காரணத்தை அறிய அதிநவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்பும் சில சமயம் வலிப்பு நோயின் காரணத்தை அறிய முடியாது.
அவர்கள் மருந்து, மாத்திரை சாப்பிட்டு நோயை கட்டுப்படுத்தவேண்டும். வலிப்பு நோயாளிகள் முக்கியமாக கவனத்தில் வைக்க வேண்டியவை? மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். மதுபானம் சாப்பிடக்கூடாது.
போதுமான அளவு தூங்க வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவேண்டும். உணர்ச்சி வசப்படும் சந்தர்ப்பங்களை தவிர்த்து விட வேண்டும்
Subscribe to:
Posts (Atom)
கீல்வாதம் ( Gout )
கீல்வாதம் என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...

-
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே . இலங்கை யில் உள்ள நச்சு கடித...
-
தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், ...
-
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தா...