நுரையிரல் புற்றுநோய் தற்போது பெருகிவரும் ஆபத்தான ஒரு உயிர்கொல்லிநோயாக மாறியுள்ளது.
இது பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு வருகின்றதென கருதப்பட்டாலும் ,சிகரெட் பிடிக்கும் பழக்கமற்றவர்களுக்கும் வரலாம்.
நுரையிரல் புற்றுநோயின்போது நோய் அறிகுறி இல்லாமலேயே 5 வீதமான நோயாளிகளுக்கு புற்றுநோய் உடலில் பரவலாம்.
அதாவது 100 வீதமான நுரையீரல் புற்றுநோயாளிகள் நோய் அறிகுறியை காட்டுவதில்லை.
41 வீதமானவர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக இருமல் காணப்படும்.
22 வீதமானவர்கள் நெஞ்சுவலியை ஆரம்ப அறிகுறியாக காட்டுவார்கள்.
15 வீதமான நோயாளிகள் நெஞ்சுவலியையும் இருமலையும் கொண்டிருப்பார்கள்.
மற்றும் 5வீதத்திற்கு குறைவானவர்கள் உடல்சோர்வு, உடல்எடைகுறைவடைதல், மூச்சுவிடக்கஸ்டப்படுதல் போன்ற அறிகுறிகளை காண்பிப்பர்.
5வீதமானோருக்கு ஆரம்பஅறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை.
ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதனை தட்டிக்கழிக்க முடியாது.
ஆரம்ப அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும் எக்றே மூலம் கண்டுபிடிக்கமுடியும்.
ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் எக்றே மாற்றங்களையும் எதிர்பார்க்கமுடியும்.
No comments:
Post a Comment