Thursday, November 12, 2015

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க Try this if you want your white hair become black hair

தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும்.
அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
ஹென்னா
ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
வெந்தயம்
வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.
நெய்
நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.
மிளகு
தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.


ப்ளாக் டீ
1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

Friday, October 30, 2015

ஆண்களே...மனம் தளர வேண்டாம்

Kulantaiyinmaikkup girls a chance to escape, while the hand that was due not to the generation of men.


VIDEO : How 'healthful' fruits and veggies protect your mind too
குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு  இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை  என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன  சிகிச்சை? மகப்பேறு மருத்துவரான ஜெயந்தியிடம் கேட்டோம்...

‘‘திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு  மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். குழந்தை என்பது சமூக அந்தஸ்தாகவும் மாறிவிட்டதால்  ‘ஏதாவது விசேஷமா?' என்று சுற்றியிருப்பவர்கள் கேட்பதிலேயே தம்பதிகள் குழப்பத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். குழந்தை  இல்லாத குறையைவிட, ஊரில் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல முடியாதது பலருக்கும் வலி மிகுந்த அனுபவமாகிவிடுகிறது.

குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல்,  வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் என பொது காரணிகளும் இருக்கலாம். மன அழுத்தம்  குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு  பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட்  கட்டிகள், குழந்தைப் பருவத்தில் பருவம் அடைந்துவிடுவதைப் போலவே 30, 35  வயதிலெல்லாம் மெனோபாஸ் ஏற்படச் செய்கிற ஹார்மோன் கோளாறுகள், காசநோய் போன்ற காரணங்களால் குழந்தையின்மை  பிரச்னை ஏற்படலாம். காசநோயானது ஆண்களுக்கும் மலட்டுத்தன்மையை உருவாக்கும்.

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு  இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற  பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.விதைகளில் உற்பத்தியாகிற அணுக்கள் ணிஜீவீபீவீபீஹ்னீவீs  என்ற இடத்தில்தான் சேர்ந்திருக்கும். இந்த இடத்தில் இருக்கும் ஒரு வால்வு தாம்பத்தியம் கொள்கிறபோது விலகி,
விந்தணுக்களை வெளியேற்றும்.

மற்ற நேரங்களில் விந்தணுக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மூடிக்கொள்ளும். இதனால்தான் சிறுநீர் கழிக்கும்போது  விந்தணுக்கள் வெளியேறுவதில்லை. விந்தணுக்கள் பாதுகாக்கப்படும் இந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் குழந்தையின்மை  பிரச்னை உண்டாகும். இந்த அடைப்பு, வெரிக்கோசிஸ் போன்ற அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டதின் பக்கவிளைவாகவும்  நோய்த்தொற்றுகளின் காரணமாகவும் உண்டாகலாம்.

இக்குறைபாடுகளில் பெரும்பாலானவை விதைப்பையை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளாததாலேயே ஏற்படுகிறது.  விதைப்பைக்கு ரத்த ஓட்டமும் நாம் சுவாசிக்கிற உயிர்க்காற்றும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதன்  செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும் (இது பெண்களின் கருப்பைக்கும் பொருந்தும்). ஆனால், கொழுப்பு  உணவுகள், இறுக்கமான  உடைகள், நீண்ட நேரம் பணிபுரிவது, போதுமான தண்ணீர் அருந்தாதது, உடல் சூடு போன்ற காரணங்களால் விதைப்பைகளின்  ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் தரம் குறைந்து விடுகிறது. ஹார்மோன் குறைபாடுகளால் விதையில் போதுமான  வளர்ச்சி இல்லாததும் காரணமாக இருக்கிறது.

இன்று எல்லாவற்றுக்கும் கருவிகள் வந்துவிட்டதால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. வாகன வசதிகளும் வந்துவிட்டதால்  நடக்கிற பழக்கமும் இல்லாமல் போய்விட்டது. வேலையும் கூட, Sedentary lifestyle என்ற உடல் உழைப்பு குறைந்த  வாழ்க்கை முறையாக இருக்கிறது. உட்கார்ந்தே செய்கிற வேலை என்றவுடன் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறவர்களை  மட்டுமே நினைப்போம். அலுவலகங்களில் வேலை பார்க்கிறவர்கள், டாக்டர்கள், ஓட்டுநர்கள், வாட்ச்மேன் உள்பட பலரும் இந்த  வாழ்க்கை முறையில்தான் இருக்கிறோம்.

வேலை முறையை மாற்ற முடியாத சூழலில், குறைந்தபட்சம் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று  திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரமான சூழலில் நல்ல காற்றை சுவாசித்து, தளர்வான உடைகள்  அணிந்து அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மாலையில் கூடுதலாக வேண்டுமானால்  உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். அதற்காக, காலை உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது.

மாலை உடற்பயிற்சியில் அன்றைய தினம் சாப்பிட்ட கலோரிகளைதான் எரிப்போம். ஏற்கெனவே உடலில் சேர்ந்திருக்கும்  கலோரிகளை எரிப்பதற்கு காலை வேளை உடற்பயிற்சியே சிறந்தது. முக்கியமாக, அடைத்துவைக்கப்பட்ட அறைக்குள், பலருடன்  கூட்டாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையாக, ‘முறையான  உணவுமுறையைப் பின்பற்றுங்கள், சுகாதாரமாக இருங்கள், தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அடிப்படை  மாற்றங்களைத்தான் முதலில் சொல்வோம்.

இரண்டாவது கட்டமாக உடல் பரிசோதனை (Physical examination) செய்தால், என்ன பிரச்னை என்பதை அறிந்து  கொள்ளலாம். பெரும்பாலான மலட்டுத்தன்மையை இந்த இரு கட்டங்களிலேயே சரி செய்துவிடலாம். சரி செய்ய  முடியாவிட்டாலும், IUI, IVF, ICSI போன்ற பல சிகிச்சைகள் அடுத்தடுத்து இருக்கின்றன. மருத்துவம் பல்வேறு  வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில்  குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்னையாகவோ நினைக்க வேண்டியதில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம்... 


ஒரே நாளில் பிரச்னையைத் தீர்க்க மருத்துவர் கடவுள் அல்ல என்பதைத் தம்பதியர் புரிந்துகொள்ள வேண்டும். கணவன்,  மனைவி இருவருக்கும் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற சிகிச்சைகளை செய்ய மருத்துவருக்கு  அவகாசம் தேவை. மருத்துவர் மேல் மொத்த அழுத்தத்தையும் திணித்துவிட்டு, இந்த சோதனை, அடுத்து இன்னொரு சோதனை,  இன்னொரு மருத்துவமனை என்று ஓடிக் கொண்டே இருப்பதாலோ,  பதற்றப்படுவதாலோ, நாம் எதிர்பார்க்கிற பலன் கிடைக்கப்  போவதில்லை.

குழந்தை என்பது மிகவும் சந்தோஷ மான, நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தப்போகும் அழகான விஷயம். அந்த நல்ல  விஷயத்துக்காகக் கொஞ்சம் காத்திருந்தால் எந்தத் தவறும் இல்லை.  இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை  என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், சிகிச்சை பெற்றுக்கொள்ளப் போகும் மருத்துவமனை தரமானதுதானா,  சிகிச்சையளிக்கப் போகிறவர் தகுதி பெற்ற மருத்துவரா என்பதை கவனமாகப் பரிசீலனை செய்துகொள்ளுங்கள். ஆல் தி பெஸ்ட்!

சில வழிமுறைகள்


இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால்,  தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது.  ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரண ரத்தப்பரிசோதனை  நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.

இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும்.  நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும்.  ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான  காட்டன் உடைகள் அணிவது நல்லது.

சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த  ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.

லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும்,  கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை  பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்னை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக  எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.

சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில்  வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக  ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட  பாலிசிஸ்டிக் ஓவரி(Polycystic ovary) குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்!

பேபி பெயின் கில்லர்............?


\Headaches or stomach pain killers who give to children? Child psychiatrist Lakshmi Prashant


தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு பெயின் கில்லர் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதன்மூலம் குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், எஃப்.டி.ஏ. ஒப்புதல் அளித்த வலிநிவாரணி மாத்திரைகள் குறித்த முழுத் தகவல்கள், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்த  பதிவுபெற்ற மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்கலாம்.

சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வலிநிவாரணி மாத்திரைகள், டாக்டர் பரிந்துரைக்காத மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்னை, மன அழுத்தம் காரணமாக  தலைவலி உண்டாகலாம். அதற்கு பாராசிட்டமால் கொடுக்கலாம். வயிற்றுவலி மட்டும் இருந்தால் எந்த இடத்தில் வலி உள்ளது, வலியின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மாத்திரை கொடுக்கலாம்
.

Monday, May 25, 2015

Herpes Zoster - நரம்புக் கொப்பளிப்பான்

ந்தப் பெண்ணின் முதுகில் கொப்பளங்கள் சிறிய சிறிய கூட்டங்களாக இருக்கின்றன.


மற்றொரு பெண்ணின் முதுகிலும் வயிற்றிலும் தோன்றியவற்றின் படம் இது. அதேபோன்ற கொப்பளங்கள் உள்ளன.

மென்மையான தோலினால் மூடிய கொப்பளங்கள். உள்ளே சிறிதளவு தெளிவான நீர் இருக்கிறது.

கொப்பளிப்பான் நோயில் வரும் கொப்பளங்கள் போலவே இருக்கின்றன. ஆனால் கொப்பளிப்பான் போல உடல் முழுவதும் வீசிப் போடவில்லை.

நடு முதுகில் முள்ளந் தண்டிற்கு அருகில் ஆரம்பித்து வயிறு வரை தொடர்கிறது. வயிற்றின் ஒரு பாதிப் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது.

நடுவயிற்றைத் தாண்டி மறு பக்கம் போகவே இல்லை. இவருக்கு இடப் பக்கத்தில் மட்டுமே வந்தது. 

முகத்தில் இது வந்தால் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களுக்குள்ளும் கொப்பளங்கள் போடக் கூடும். அப்படியானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

 இதுவும் ஒருவகைக் கொப்பளிப்பான்தான். இதனை நரம்புக் கொப்பளிப்பான் என்பர். முந்நாணிலிருந்து (Spinal Cord) வெளிவரும் ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றும்.


பொதுவாக கொப்பளங்கள் தோன்ற முன்னரே அந் நரம்பின் பாதையில் காரணம் சொல்ல முடியாத வலி இருக்கும்.

வலியிலிருந்து மீள்வதற்காக பலரும் தமக்குத் தெரிந்த ஓயின்மென்ட், கிறீம், எண்ணெய் பலவற்றையும் தேய்பதுண்டு.

ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றியதும் மருந்து ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற மயக்கம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.

பொதுவாக முன்பு எப்பொழுதாவது கொப்பளிப்பான் நோய் வந்தவர்களுக்கு மட்டுமே இது வரும். பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள்.

முன்பு ஏற்பட்ட வெளிப்படையாக நோய் மாறிய பின்னர் நரம்பு மண்டலத்தில் மறைந்திருந்த கிருமிகள் மீளுயிர்ப்பதால் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒரு நரம்பின் பாதையில் மட்டும் வருகிறது. 

ஆங்கிலத்தில் Shingles என்பர். மருத்துவத்தில் Herpes Zoster என வழங்கப்படுகிறது. 

தொற்று நோய். எல்லாக் கொப்பளங்களும் காய்ந்து அயறாகும் வரை நோயூற்றவரிலிருந்து ஏனையவர்களுக்குத் தொற்றும். தொற்றினால் கொப்பளிப்பான் நோய் வருமே ஒழிய நரம்புக் கொப்பளிப்பான் அல்ல.

Acyclovir போன்ற வைரஸ் எதிர் மருந்துகள் உள்ளன. ஆயினும் அவற்றை முதல் 48 மணிநேரத்திற்குள் ஆரம்பித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பொதுவாக 14 நாட்களுக்குள் கொப்பளங்கள் மருந்துகள் இல்லாவிடினும் தானாகவே காய்ந்து உலர்ந்து விடும்.

சிலரில் கொப்பளங்கள் நன்கு மாறிய பின்னரும் நோய் வந்த நரம்பின் பாதையில் கடுமையான வலி நீடிக்கக் கூடும். இதனை Postherpatic Neuralgia என்பர். ஒரிரு மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை அவ் வலி நீடிக்கலாம். அத்தகையவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு சிகிச்சையைத் தொடர நேரிடும்.

Wednesday, March 4, 2015

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம் ( litchi fruit)

வப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்!
லிச்சி பழம் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது.சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.
லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76 சதவீதம், மேலும் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.
இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.
பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.
உடலுக்கு உரம்
லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
லிச்சி பழம் வைட்டமின் சி யை ஆதாரமாக உள்ளது. இதில் வைட்டமின் சி, மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளதால் நோயை எதிர்க்க கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது.
ரத்த உருவாக்கம்
மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.ரத்த உருவாக்கத்தை அதிகப்படுத்துகிறது.தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.
சிவப்பணு உருவாக்கம்
ஏனெனில் சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்பு சத்துகளை உரிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்


சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5  ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும்  சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு  தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது  எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும்  எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட்,  பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம்  கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

மிகவும் அழகாக, பல வடிவங்களில், கைக்கு அடக்கமாக பல அளவுகளில், மலிவான விலைகளில் கிடைப்பதனால், அழகின் மீது ஈடுபாடு கொண்ட நம்மவர்களால் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை.
ஆனால், நீங்கள் தவிர்த்தாக வேண்டிய நிலையில் உள்ளீர்கள். பிளாஸ்டிக் பாட்டில்களினால் பல சின்ன சின்ன உடல்நல கோளாறுகளில் இருந்து உயிரைக் கொல்லும் நோய்களை ஏற்படுத்தும் வரையிலான தன்மைகள் இருக்கின்றன. எந்த ஒரு விஷயத்தையும் நாம் அதன் கடை நிலையிலோ அல்ல அபாயத்தின் அருகாமையில் இருக்கையிலோ தான், அதிலிருந்து பாதுகாக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்கவே ஆரம்பிப்போம்.

ஆனால், இந்த விஷயத்தில் ஏற்கனவே நாம் கடை நிலையில் தான் இருக்கிறோம். பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என அறிந்திருப்போம். ஆனால், இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளும் ஏற்படலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம்! தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது உடல்நலத்திற்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன. அதைப் பற்றி விவரமாக தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பைசெப்ஃபீனால் ஏ (bisphenol A, or BPA)

இந்த இரசாயனம் நாம் பயன்படுத்தும் அனைத்து வகையிலான பிளாஸ்டிக் பொருட்களிலும், எலக்ட்ரானிக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் உணவு எடுத்து செல்லும் டப்பாக்களில் இருந்து தண்ணீர் பருகும் பாட்டில்கள் வரை அனைத்திலும் இதன் கலப்பு இருக்கிறது. இந்த இரசாயனம் தான் நம் உடலுக்கு கெடுதல்களை விளைக்கிறது என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உடல் செயலியல் பிரச்சனைகள்

அமெரிக்காவின் ஒரு ஆய்வகம் பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பில் சேர்க்கப்படும் பைசெப்ஃபீனால் ஏ என்னும் நச்சு பொருளினால் மனிதர்களுக்கு இதய பாதிப்புகள் மற்றும் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட வெகுவாக பாதிப்பு இருக்கிறது. இதை பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என 2008 ஆம் ஆண்டே கூறியிருக்கின்றனர். ஆயினும் 90% பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளில் இதன் கலப்பு இருந்து வருகிறது.

புற்றுநோய்

பைசெப்ஃபீனால் ஏ நம் உடலில் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக நம் உடலில் புற்றுநோய் கட்டிகள் எளிதாக உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு இதன் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பல மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதய நோய் பதிப்புகள்

கடந்த ஆண்டு 15 வயதிலிருந்து 74 வயதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 1500 பேர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் கலக்கப்பட்டிருக்கும் பைசெப்ஃபீனால் ஏ என்ற இரசாயன நச்சு பொருளின் காரணத்தினால் அவர்களுக்கு இதய பாதிப்புகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக ஏற்படுவதாய் கூறப்பட்டுள்ளது.

விந்தணு மற்றும் கருச்சிதைவு

பைசெப்ஃபீனால் ஏ எனப்படும் இந்த இரசாயனத்தில் பல வகைகள் இருக்கின்றன இதில் டைப் 7 என சொல்லப்படும் இரசாயனத்தின் கலப்பினால், ஆண்களுக்கு விந்தணு வலுவிழப்பது மற்றும் கர்ப்பணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு

வேலைக்கு செல்லும் அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தான் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். ஏன் நாம் கடைகளில் வாங்கும் தண்ணீரும் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் பாக்கெட்களிலும் தான் அடைத்து தரப்படுகிறது. பெரும்பாலும் தினமும் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அல்லது பாட்டில்களில் தண்ணீர் அருந்துபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது அதுவும் இளைய தலைமுறையினருக்கு அதிகமாக இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

பாக்டீரியா

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர்களில் மிக வேகமாய் பாக்டீரியாக்கள் உருவாகும். இது நமது வீட்டில் பிடித்து வைக்கப்படும் பாட்டில்களில் மட்டுமல்ல, கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களிலும் பாக்டீரியாக்கள் விரைவாக உருவாகிறது. எனவே, பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பருகுவதை தவிர்த்திடுங்கள்.

மட்டமான பிளாஸ்டிக்

உயர்த்தர பிளாஸ்டிக் எப்போதும் வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. அதன் பின் இதர அலுவலக மற்றும் மற்ற உபயோகத்திற்கு அதற்கு அடுத்த இரண்டாம் தர பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கடைசி நிலையான மட்டமா நிலைக்கொண்ட பிளாஸ்டிக்கை கொண்டு தான் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில், இதற்கு உத்தரவாதம் தர தேவையில்லை, மற்ற அனைத்திற்கும் உத்திரவாதம் தரவேண்டும். நம் உடல்நலத்திற்கு உத்திரவாதம் அற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பெட்டிகளில் இனிமேல் உணவோ அல்லது நீரோ உட்கொள்ள வேண்டாம்.

நன்றி: http://tamil.boldsky.com

Sunday, February 1, 2015

தேங்காய் எண்ணெயில் உள்ள நன்மைகள்..
News
பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கும் இயற்கையான வீட்டு சிகிச்சையில் ஒன்றாக தேங்காய் எண்ணெய் விளங்குகிறது. புண்களை ஆற வைப்பது முதல் சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது வரை இதன் பயன்கள் மிக நீண்டதாகும்.சந்தையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற எதிர்வினைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
இயற்கையான வடிவில் உள்ள தேங்காய் எண்ணெய், பல்வேறு சரும பிரச்சனைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வீட்டு சிகிச்சையாக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை அருந்தவும் செய்யலாம் அல்லது உடலின் மீது தடவியும் பயன்படுத்தலாம். அதனை உட்கொள்ளும் போது, ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுவதோடு, பயன்படக்கூடிய ஆற்றலையும் அளிக்கும்.
 தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் சில நன்மைகள் :
தேங்காய் எண்ணெயின் வீட்டு சிகிச்சைகளில் மௌத் ஃப்ரெஷ்னரும் ஒன்றாகும். இதனை புரிய தேங்காய் எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் உதவிடும்.
இதனை மேக்-அப்பை களைப்பதற்கும் பயன்படுத்தலாம். முகத்தில் போட்டிருக்கும் மேக்-அப்பை நொடிப்பொழுதில், எந்த ஒரு பாதிப்பும் இன்றி நீக்க இது உதவும்.
குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வறண்ட சருமத்திற்கு, குறிப்பாக முழங்கைகள் மற்றும் மூட்டுகள்.
மேல்தோல் உரிக்கப்படும் போது அதனை ஆற வைக்க இது உதவும். மேனிக்யூர் செய்த நகங்களில் பயன்படுத்தினால் அது நீடித்து நிலைக்கும்.
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டால் வலி மிகுந்ததாக இருக்கும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய்.
பிரசவத்திற்கும் முன்பும் பின்பும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் போது கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் உருவாகாமல் தடுக்கும்.
இதில் பல வித மருத்துவ தன்மைகள் உள்ளதால், முகத்தில் உள்ள சருமத்தில் மிகவும் மென்மையானதாக விளங்கும் கண்களுக்கு கீழான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி(fungal killing..Special Candida Species) குணங்கள் உள்ளதால், உங்களுக்கு சில தொற்றுக்கள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
காயங்கள் மற்றும் வெட்டுப் புண்களுக்கும் இது கிருமிநாசினியாக செயல்படும்.
வறண்ட தலைச்சருமத்தால் ஏற்படுவது தான் பொடுகு. அதற்கு தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்திடுங்கள்.
மூட்டைப் பூச்சி கடிகள் மற்றும் பல விதமான அரிப்புகள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக விளங்கும். இது கிருமிநாசினியாக செயல்பட்டு, மூட்டு கடிகளும் நிவாரணம் அளிக்கும்.
சுருக்கங்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வை அளிக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும். அதனால் இரவு நேர கிரீம்மாக இதனைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மசாஜ் செய்தால், முடி வளர்ச்சி மேம்படும். மேலும் முடி கொட்டுவதையும் இது தடுக்கும்.

Thursday, January 8, 2015

மலட்டுத்தன்மையை நீக்கும் கேரட்

மலட்டுத்தன்மையை நீக்கும் கேரட்
கேரட்டில் உள்ள வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கராட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கேரட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம்.மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது.நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் ஜீரணத்திற்கு உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும்.ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது.வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வரமால் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கலாம்.
கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறுது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும்.
உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகும். எலும்புகள் உறுதியாகும்.முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும்.தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.
கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.சருமத்திற்கு பொலிவையும், தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது. கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக் கண் போன்றவற்றை குணமாக்கும்.

கேரட்டின் மேல் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அல்லது திருகி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.கேரட் சாறுடன் பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும்.
மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும். தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தலாம்.
ரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் மூட்டுவீக்கம், வாத நோய்கள் தீரும்.மலட்டுத் தன்மையை மாற்றும் வைட்டமின் நிறைந்து காணப்படுகிறது.கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கேரட் ஜூஸ் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸை குடிக்க வேண்டும்.
கேரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்டுவதாகவும், நீர் இளக்கியாகவும் செயல்படும் தன்மை கொண்டது. வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லைகளுக்கும் மருத்துவ ரீதியான பலன்களைத் தந்து உதவுகிறது. இருமலைப் போக்கும்.
இதை மிக அதிகமாகத் தின்றால் பித்தமாகும்.நீண்டகாலமாக அல்சர் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டதால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணமடையும்.
மறுபடியும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்துவிடும்.றீ கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்.

ஜுஸ் எடுப்பது எப்படி?

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம்.



Thanks for New Jaffna helping update of  Maruthuvamkel 

Sunday, January 4, 2015

பெரியவர்களுக்கும் உண்டு தடுப்பூசி............ for .adult also have vaccination......

வருமுன் தடுப்போம்

தடுப்பூசி என்பது பிறந்த குழந்தைகளுக்கானது என்பதும், மருத்துவர் கொடுக்கும் அட்டவணைப்படி, குறிப்பிட்ட இடைவேளைகளில் குறிப்பிட்ட வயது வரை போடப்படுபவை என்பதும் பரவலான நம்பிக்கை. பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் அவசியம் என்கிறார் பொது மருத்துவர்  ராமநாதன் ராம்குமார்.‘‘பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளால் மாதம் ஒரு புதிய நோய் அறிமுகமாகும் இன்றைய சூழலில் வயது பாகுபாடில்லாமல் பெரியவர்களும் தக்க நேரத்தில் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் அவர்.

‘‘குறிப்பிட்ட நோய் வராமல் தடுப்பதற்கு எடுத்துக்கொள்ளும் தடுப்பு மருந்துதான் தடுப்பூசி. இதை ஊசி மூலமோ, வாய்வழி (Oral vaccination)  மருந்தாகவோ எடுக்கலாம். குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் என்னென்ன வாக்ஸின்கள் தர வேண்டும் என்று அட்டவணையே உண்டு. பெரியவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை. ஒரு நோய் வர வாய்ப்புண்டு என்றால், அதற்கு முன்பே தடுப்பு வாக்ஸினை எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த பாக்டீரியா அல்லது வைரஸ் அந்த நோயை ஏற்படுத்துமோ, அவை பலமுறை செல்வளர்ப்பு செய்யப்பட்டு வாக்ஸினாக மாற்றப்படும். இதை செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்புசக்தி உருவாகி, குறிப்பிட்ட நோய் வராமல் செய்துவிடும். 

பெரியவர்களுக்கான தடுப்பூசிகள்...


ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று வராமல் தடுக்கும், ஹெபடைடிஸ் பி வாக்ஸினை குழந்தைப் பருவத்திலேயே இப்போது கொடுத்துவிடுகிறோம். சிறு வயதில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள், இப்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிமோகாக்கல் வாக்ஸினை எடுத்துக்கொள்வதன் மூலம் நிமோனியாவை தடுக்கலாம். நுரையீரல் நோய்த்தொற்று உள்ளவர்கள், இதயநோய், கல்லீரல் நோய், நீரிழிவு உள்ளவர்களுக்கு இது அவசியம்.

கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் ‘ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ்’ வாக்ஸினை 18 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

இன்ஃப்ளுயன்சா வைரஸ் வாக்ஸினை ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் ஃப்ளு காய்ச்சலை தடுக்கலாம்.

எம்எம்ஆர் (Measles, mumps, rubella) வாக்ஸின் மற்றும் சிக்கன் பாக்ஸ் வாக்ஸினை குழந்தைப் பருவத்தில் எடுக்காதவர்கள், அம்மை நோய் தாக்காதவர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் வரும் காலத்தில் அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

ஜோஸ்டர் (zoster vaccine) வாக்ஸினை 65 வயதை தாண்டியவர்கள் எடுத்துக்கொண்டால் அக்கி நோய் (Herpes zoster) வராமல் தப்பிக்கலாம்.
 -
thanks for Dinakaran link
picture attached by :Guruhulan Alvappillai (Mbbs) china JU

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...