Saturday, May 21, 2016

பாம்புக்கடி (Snake Bite)

பாம்புக்கடி (Snake Bite)





பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள். 
இந்திய கோப்ரா 
ராஜ நாகம் (King cobra) 
Banded krait
Slender coral snake 
Russell viper 
Saw- scaled viper 
Common krait
பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன. 

பாம்புக் கடி ஏற்பட்டால் 
அமைதியாக இருங்கள் 
பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம். 
கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க Loove vplinˆ உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது. 
வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள். 
காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம். 
விஷத்தை உறிஞ்சி எடுக்க வேணடாம். 
உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். 

விஷம் 
ஒருவருக்கு  விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்.

உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல் 
சுவாசத்தில் இரசாயண நெடி அடித்தல் 
உடலில், உடையில் உள்ள வாசனை, கறை 
காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்ட செல்லவும். 
மயக்கம் 
சுவாசத் தடை 
வலிப்பு 

உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்-
கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.

வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இராசயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ அருந்திவிட்டால், இந்த இரசாயன பாட்டிலுள்ள லேபிளைப் படிக்கவும். தெரியாமல் அதை அருந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். அல்லது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து விடவும். கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

கவனம்
வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சிக்க வேண்டாம்.

மின்சாரத் தாக்குதல்
மின்சாரத் தாக்குதலின் விளைவு வோல்டேஜின் அளவுக்கு ஏற்ப மாறுபடும், தவிரவும், மின்சாரம் எந்த வழியாக உடலில் பாய்ந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்
மாரடைப்பு 
இதயக் துடிப்பில் மாறுதல் (Arrhythmias)
மூச்சு விட முடியாத நிலை
வலிப்பு
மரத்துப் போதல்
மயக்கம்

மருத்துவ உதவி கிடைக்கும் வரை என்ன செய்யலாம்?
தொட வேண்டாம்
சுவிட்சை உடனடியாக அணைத்து விடவும். பிளாஸ்டிக், மர பொருள்களால் மின்சாரம் தாக்கிய பகுதியை நகர்த்தலாம்.
சுவாசம், இருமல், அசைவை கவனிக்கவும். தேவைக்கு ஏற்ப சிறிசிஸி-ஐத் தொடங்கவும்.

கீழே படுக்க வைக்கவும். தலையை விட கால்களை உயர்த்தி வைக்கவும்.

எச்சரிக்கை
வெறும் கைகளால் அவரைத் தொட வேண்டாம்.
ஒயர்களிலிருந்து தீப்பொறி காணப்பட்டால். 20 அடிக்குப் பின்னால் நகர்ந்து விடவும்.
மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இல்லாத பட்சத்தில், அவரை வேறு இடத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டாம்.

வெப்பம் தொடர்பான அறிகுறிகள்
சுளுக்கில் (Cramps) ஆரம்பித்து, ஆயர்ச்சி, வெப்பத்தாக்குதல் என்று பல அறிகுறிகள் உள்ளன.

வெப்பச் சுளுக்கு (CRAMPS)
அதிகம் வலிக்கும். போதிய அளவு நீராகாரம் இல்லாததால் ஏற்படலாம். 
என்ன செய்யலாம்?
ஓய்வு
பழச்சாறு அருந்தலாம்
1 மணி நேரத்துக்கு அதிகமாக நீடித்தால் மருத்துவ உதவி

வெப்ப அயர்ச்சி
கடினமான பணிகளுக்குப் பிறகு ஏற்படும்
மயக்கம்
வாந்தி
அதிக வியர்வை
கருத்த மேனி
குறைந்த ரத்த அழுத்தம்
குளிர்ந்த தோல்
மெலிதான காய்ச்சல்

என்ன செய்யலாம்?
நிழலான பகுதிக்கு நகர்த்திச் செல்லலாம்
படுக்க வைக்கலாம். கால்களை தலைமாட்டிலிருந்து உயர்த்தி வைக்கலாம்.
உடைகளைத் தளர்த்தலாம்.
குளிர்ந்த நீரைப் பருகத் தரலாம்.
விசிறி விடலாம். குளிர்ந்த நீரால் ஒத்தடம் தரலாம்.
கவனமாக கண்காணிப்பு அவசியம். வெப்பத் தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 102 டிகிரிக்கு மேலாகக் காய்ச்சல் இருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

வெப்பத் தாக்குதல்
வெயிலில் கடுமையான வேலைகள் செய்வதால் ஏற்படும். வயதானவர்களுக்கும் வியர்வை வெளியேறதாவர்களுக்கும் அதிகம் ஏற்படும்.
 வெப்பத் தாக்குதல் ஏற்பட்டால் வியர்வை வெளியேறும் ஆற்றலும், சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மறைந்து விடுகின்றன. 104 டிகிரிக்கு மேலே போனால் வெப்பத் தாக்குதல் ஏற்படலாம்.

பிற அறிகுறிகள்
அதிகரித்த இதயத் துடிப்பு
விரைவான அல்லது குறைச்சலான சுவாசம்
அதிகரித்த அல்லது குறைந்த ரத்த அழுத்தம்
வியர்வை நின்று போதல்
எரிச்சல், குழப்பம், மயக்கம்
என்ன செய்யலாம்?

நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்
மருத்துவ உதவி பெறலாம்
தண்ணீர் தெளிக்கலாம். விசிறி விடலாம்.

உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க




எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். 
ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால். கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெல்ல வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைப்பதற்கு மட்டுமே உதவும்.

‘கையினால் உடல் பாகங்களை நீவி விடுவதன் மூலம் எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால் அந்தத் தெறிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே மருத்துவரிடம் செல்வது அவசியம் இல்லை. அதற்கு நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா. நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா. என்பதையெல்லாம் கவனியுங்கள்.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள்.
 இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

தனிமையில் மாரடைப்பா வந்தா என்ன பண்ணுவீங்க....?




பாடாய் படுத்தும் மாரடைப்பு எப்போது வரும்னு யாருக்கும் தெரியாது. வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
 நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மருத்துவமனை ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், 
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன வேண்டும்

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது.

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
 இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலா
ம்

Friday, May 6, 2016

எந்த பழத்தில் என்ன உள்ளது..?

ஆரோக்கிய வாழ்க்கைக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு வகை பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எனவே பழங்களின் பயன் அறிந்த சாப்பிடுங்கள்.
அவகேடா
கெட்ட கொழுப்பை குறைத்து நல்லகொழுப்பை அதிகரிக்கும்.உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும்.வாய் துர்நாற்றத்தை போக்கும்.இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும்.
வாழைப்பழம்
உடனடி ஆற்றல் கிடைக்கும்.விட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது.மன அழுத்தம் நீங்கும்.அல்சரை தடுக்கும்.மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பேரிக்காய்
சிறுநீரக கோளாறுகளை சீர்செய்யும்.நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.எலும்புகளை வலுவாக்கும்.பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில்இருந்து பாதுகாக்கும்.நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைபோக்கும்.
மாம்பழம்
உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது.செரிமான சக்தியை மேம்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்களுக்குநல்லது.
திராட்சைப்பழம்
பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைகுறைக்கும்.குடல் புற்றுநோய், பிராஸ்டேட்புற்றுநோயை தடுக்கும்.இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளைதடுக்கும்.வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுநோய்களைதடுக்கும்.சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...